×

ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீசார் மாரம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் புதர் மறைவில் இருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார்  சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அய்யாக்கண்ணு(எ) சின்னசாமி(36), ராஜாக்கண்ணு (43) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.  வனவிலங்குகளை வேட்டையாட அதை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இதன்பேரில், வழக்குப்பதிந்த போலீசார் இருவரையும் கைது  செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gunmen ,Uthangarai , country gun, Uthangangar,arrested
× RELATED ₹25 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பேர் கைது