×

உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக எம்டிசி டெப்போ நேர காப்பாளர் தற்கொலை: பூந்தமல்லியில் பரபரப்பு

சென்னை: பூந்தமல்லி பணிமனையில் உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக நேரகாப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆவடி ராஜ்பாய் நகர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரூப்குமார் (57). பூந்தமல்லி பஸ் நிலையத்தில் நேர காப்பாளராக பணியாற்றி வந்தார். இவர், இன்னும் ஆறு மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் ரூப்குமாரை, பூந்தமல்லி பணிமனை அதிகாரிகள் கண்டக்டராக சென்று பணியாற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர்.  ஆனால், உடல்நலம் குறைவு காரணமாக ரூப்குமார் மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அதிகாரிகள் உத்தரவால் கடந்த சில நாட்களாக மனவுளைச்சலில் இருந்த ரூப்குமார், நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தூக்கில் தொங்கிய ரூப்குமாரை மீட்டு ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். அங்கு, டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி ரூப்குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, ஆவடி போலீசார் சம்பவ இடம் சென்று ரூப்குமார் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக எம்டிசி டெப்போ நேர காப்பாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MTC Depot ,Darcher , MTC Depot,time defender,suicide, high officials ,Darcher
× RELATED மனைவி டார்ச்சர் தாங்கமுடியாமல் துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி தற்கொலை