ஆண்டிபட்டி: துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு என்பதை துணை பிரதமர் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், அதிமுக சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு என்று கூறுவதற்குப் பதில், துணை பிரதமர் வெங்கையா நாயுடு என `வழக்கம் போல’ பேசினார். அவர் பேச்சைக் கேட்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி