×

பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகள் கண்டறிந்து அழிப்பதில் இஸ்ரேல் ராணுவம் தீவிரம்

ஜெருசலேம் : இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் வகையில் பயங்கரவாதிகள் உருவாக்கியுள்ள சுரங்க பாதைகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அழிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு இஸ்ரேல் ராணுவத்திற்கும் Hezbollah இயக்கத்தினருக்கும் இடையே நடந்த ஒரு மாத கால போரில் லெபனானில் 1,200 பேரும் இஸ்ரேலில்160 பேரும் உயிரிழந்தனர்.

இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் Lt. Col. Jonathan Conricus, இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் வகையில் Hezbollah இயக்கத்தினர் உருவாக்கியுள்ள சுரங்க பாதைகள் அழிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் டிசம்பர் 4ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 4 சுரங்க பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த பாதைகள் அனைத்தும் Hezbollah இயக்கத்தினரால் லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் வரும் வகையில் உருவாக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து சுரங்க பாதைகளை கண்டறிந்து அவை அழிக்கப்படும் எனவும் Conricus உறுதி தெரிவித்தார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Israeli ,military ,terrorists , Israel,destruction,Hezbollah, tunnels
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...