×

அசாமில் புலியை விரட்ட முயன்றபோது குளத்தூர் ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலி : உடல் இன்று அடக்கம்

குளத்தூர்: அசாமில் புலியை விரட்ட முயன்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரான குளத்தூரில் அடக்கம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே முத்துக்குமாரபுரத்தை சேர்ந்த பாப்புராஜ் மகன் பார்த்திபன் (23). கடந்த 2015ல் ராணுவத்தில் சேர்ந்த இவர், அசாம் மாநிலம் ஜோரங்க் பகுதியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு பணியிலிருந்த போது அப்பகுதிக்கு வந்த புலியை பார்த்திபன் மற்றும் சக வீரர்கள் விரட்ட முயன்றபோது பார்த்திபன் தவறி விழுந்ததில் அவரிடமிருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து பார்த்திபன் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து பலியானார்.

இதுகுறித்து முத்துக்குமாரபுரத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான முத்துக்குமாரபுரத்திற்கு கொண்டு வந்து இன்று ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : soldier ,Kulathur ,Assam , Assam, Kulathoor, soldier
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா