×

ரபேல் ஒப்பந்தம் குறித்த விமானப்படை தளபதியின் கூற்று பொய்? காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி

ஐதரபாத்: ரபேல் ஒப்பந்தம் குறித்த விமானப்படை தளபதியின் கூற்று பொய் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐதரபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரபேல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமானப்படை தளபதி தனோவா வரவேற்றதை விமர்சித்தார். ஒப்பந்தம் இறுதியாகும் முன்பாக இந்தியன் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தின் வசதிகளை ஆய்வு செய்து தனோவா திருப்தி தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் ரபேல் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதை தனோவா எவ்வாறு வரவேற்கிறார் என்பது வீரப்ப மொய்லியின் கேள்வி. இதனால் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவை பொய்யர் என்று மொய்லி விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து தனோவாவை பொய்யராக சித்தரிக்கவில்லை என்று விளக்கம் அளித்த மொய்லி, தவறான ஆவணங்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்றே கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lieutenant General ,Veerappa Moily ,Commander ,Air Force ,Rafael Agreement Congress , Rafael affair, Congress, Veerappa Moily, Air Force Commander, Danova
× RELATED டிக்கெட் கிடைக்காததால் எந்த...