கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் ரயில் நிலையம் அருகே போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். காவலர்களை கண்டதும் ஒரு கும்பல் தப்பி ஓட முயன்றது. அவர்களை மடக்கி விசாரித்ததில் பால்முருகன் (24), கார்த்திகேயன் (24), மதுரை மாநகர ஆயுதப்படையில் எஸ்.ஐயாக பணியாற்றும் தனிக்கொடி மகன் ஜெயலட்சுமணன் (22) என்பது தெரியவந்தது. இவர்கள், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்ததும், சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த ஒரு வாரமாக கோவையில் தங்கி இரவு நேரங்களில் தண்டவாளத்தின் ஓரம் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து, 1.2 கிலோவை கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி