சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 3ம் தேதி நடைபெற்ற தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அண்ணா பல்கலைக்கழக ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் ெசன்னை சிபிசிஐடி போலீசில் டிசம்பர் 7ம் தேதி கணிதவியல்-II விடைத்தாள் வெளியானது தொடர்பாக புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக சமூக ஊடகங்களை ஆய்வு செய்ததன் மூலம் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் என்ற இரண்டு பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். இருவரிடமும் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான அண்ணா பல்கலைக்கழக ஊழியரை தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி