×

மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து இன்று தொடங்கியது

மார்த்தாண்டம்: நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் ரூ.100 மார்த்தாண்டத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதில் ரூ.220  கோடியில் நடந்து வந்த மார்த்தாண்டம் மேம்பால பணிகள் தற்போது ஏறத்தாழ முடிந்து விட்டது. குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு, தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு மேம்பாலமாக  இது உள்ளது. 109 பில்லர்கள் மேம்பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த நிலையில் இன்று காலை முதல் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களில் வெள்ளோட்ட முறையில் வாகன போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மார்த்தாண்டத்தில் இன்று காலை சுமார் 5 மணியளவில்,  மேம்பாலம் ெதாடங்கும் வெட்டுவெந்நி மற்றும் பம்மம் பகுதிகளில் பாஜ சார்பில் பூஜைகள் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், பாஜ குழித்துறை நகர தலைவர் பக்தசிங், நிர்வாகிகள் சஜூ, ராஜன், போக்குவரத்து கழக அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாலத்தில் வாகன போக்குவரத்து தொடங்கியது. டிராபிக் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் வாகனங்களை ஒழுங்குபடுத்தி விட்டனர். பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. பாலத்தில் செல்வது மகிழ்ச்சியான, புதிய அனுபவமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். வரும் 25ம் தேதி வரை மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வரலாம். பின்னர் 4 நாட்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு சிறுசிறு வேலைகள் நடக்கும். மீண்டும் 29ம் தேதி ெதாடங்கும் வாகன போக்குவரத்து ஜனவரி 2 வரை ெதாடரும். அதன் பிறகு மீண்டும் 12ம்  தேதி முதல் தொடர்ந்து பாலத்தில் வாகனங்கள் செல்லலாம். மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் நாட்களில் கீழ்ப்பக்கமாக வாகனங்கள் செல்லலாம். பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பக்க சாலை ஒரு வாரத்தில் தயாராகிவிடும். தற்போது மேம்பாலம் அருகே இடங்களை குறிக்கும் வழிகாட்டி பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாலம் தொடங்கும் பம்மம் மற்றும் வெட்டுவெந்நி, மார்க்கெட் சாலை பகுதிகளில் இந்த வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கட்டணம் குறையுமா?:
மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் நடந்து வந்ததால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் சுற்றிச்சென்றன. அரசு பஸ்களும் நெடுந்தொலைவு சுற்றிச்சென்றதால் கட்டணம் ரூ.5 முதல் 10 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. தற்போது மேம்பாலம் வழி பஸ்கள் செல்வதால் தூரம் குறையும். அதனால் பழைய கட்டணத்தைேய வசூலிக்க வேண்டும். ஆனால் இன்று காலையில் மேம்பாலம் வழியாக சென்றபோதிலும் எந்த பஸ்களிலும் கட்டணம் குறைக்கப்படவில்லை. இது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எனவே பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

பார்வதிபுரம்: பார்வதிபுரத்தில் ரூ.114 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த ஆண்டு அடிக்கல் நடப்பட்டு, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.  பாலத்தின் கீழே அணுகு சாலைகள் சீரமைக்க வேண்டியது உள்ளது. பார்வதிபுரம் மேம்பாலத்தையும் மக்கள் பார்வையிடும் வகையில்  கடந்த 15ம் தேதி மக்கள் பார்வை தின விழா அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மார்த்தாண்டம் பாலத்தில் 19ம் தேதியும், பார்வதிபுரம் பாலத்தில் 23ம் தேதியும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். அணுகுசாலை பணிகள் முடிவடைந்து, பிரதமர் அளிக்கும் தேதியில் திறப்பு விழா நடைபெறும் என பா.ஜனதா நிர்வாகிகள் கூறியிருந்தனர். இந்தநிலையில் மார்த்தாண்டம், பார்வதிபுரம் பாலத்தில் வாகனங்கள் பரிசோதனை ஓட்டம் இன்று நடத்தப்படும் என்றும், காலை 5 மணி முதல் வாகனங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது.

பாலத்தின் மேல் பகுதியில் கேபி ரோட்டில் செல்ல ஒரு வழிப்பாதை மீண்டும் அமலில் உள்ளது. மின்வாரிய அலுவலக சாலையில் இரு வழிப்பாதையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. களியக்காவிளையில் இருந்து வருகின்ற வாகனங்கள் மின்வாரிய அலுவலக சாலை வழியாகவே செல்ல முடியும். கே.பி ரோட்டில் செல்ல முடியாது. ஆனால் கே.பி ரோட்டில் பார்வதிபுரம் நோக்கி வாகனங்கள் செல்ல முடியும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை வழக்கம்போல் வாகனங்கள் பாலத்தின் மீது சென்றாலும் கனரக வாகனங்கள் பல மாற்றுப்பாதையில் இன்று காலையில் சென்றதை காண முடிந்தது. பாலம் திறக்கப்பட்ட தகவல் போதிய அளவில் சென்று சேராததும் இதற்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். ஓரிரு நாட்கள் பரிசோதனை ஓட்டம் நடைபெற்ற பின்னர் மீண்டும் பாலம் அடைக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படும். அதன் பிறகு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marthandam ,highlands , Marthandam, Parvatipuram, Floors, Vehicle Traffic
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...