சென்னை: தமிழகம் முழுவதும் 2381 அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி முதல் செயல்பட உள்ள எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு 7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி. பயில்வதற்கு 53 ஆயிரத்து 993 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 171 மையங்களில் 4803 மாணவர்களும், குறைந்தபட்சமாக 20 மையங்களில் 422 மாணவர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துதல், கற்றல் திறன் மேம்பாடு, பார்க்கும் திறன், மாணவர்களின் ஆங்கில எழுத்து மற்றும் பேசும் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதற்காக 6 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயை பள்ளிக்கல்வித்துறையும், 1 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை சமூகநலம் மற்றும் மதிய உணவுத்திட்டத் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி