×

சுரங்கத்தில் சிக்கிய 14 பேரை மீட்பதில் மீண்டும் சிக்கல்

சில்லாங்: மேகாலயா மாநிலம், கிழக்கு ஜெயின்தியா மலைக்கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் 14 தொழிலாளர்கள்  கடந்த 13ம் தேதி சிக்கிக் கொண்டனர். 370 அடி ஆழ சுரங்கத்திற்குள், அருகில் பாயும் ஆற்று நீர் உள்ளே புகுந்தது. இதில் ஒரு தொழிலாளி மட்டும் உயிர் தப்பினார். மற்றவர்களை தேடும் பணி, 6வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ராட்சத குழாய்கள் மூலமாக சுரங்கத்தில் புகுந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நேற்று கனமழை கொட்டியதால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சிக்கியவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rescuers ,mine , 14 people,trapped,tunnel,problem,retrieving
× RELATED சத்தீஸ்கரில் சுரங்க பள்ளத்தில்...