சென்னை: பெய்ட்டி புயல் சென்னைக்கு தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 19 கி.மீ வேகத்தில் நகரும் பெய்ட்டி புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி