×

டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதலாவது வழித்தட சேவை தற்போது முடியும் தருவாயில் உள்ளது. முதல் வழித்தட திட்டத்தின் இறுதியாக டிஎம்எஸ் முதல் வண்ணாரபேட்டை வரையிலான 10 கி.மீ சுரங்கப்பாதை  வழித்தடத்தில் 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. தற்போது, ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக, டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான வழித்தடத்தில் ஆயிரம்  விளக்கு, எல்ஐசி,  அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர் நீதிமன்றம்,  மண்ணடி என 6 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் விளக்கு மற்றும் எல்.ஐ.சி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டும் சிறு, சிறு பணிகள் நடந்து  வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி இறுதியில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதேபோல், ஜனவரி 2வது வாரத்தில் பாதுகாப்பு ஆணையர்  வழித்தடத்தில் ஆய்வு செய்ய உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TMS - between,colorpack, Metro Railway, Security ,Commissioner
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...