டெல்லி : ரஃபேல் போர் விமானங்களுக்கான விலையை ஒப்பிட்டுப் பார்த்தே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை உச்சநீதிமன்றத்துக்கு சீலிட்ட கவரில் அளித்தோம் என்று கூறிய நிர்மலா சீதாராமன், அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இருப்பதாக உசச்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி