இடைப்பாடி: அதிமுகவில் டிடிவி. தினகரனை சேர்க்கமாட்டோம், அவரைத் தவிர யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ெதரிவித்துள்ளார். ேசலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் புறநகர் மாவட்டம் மற்றும் மாநகர அதிமுக சார்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஏற்கனவே 1.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது புதுக்கோட்டைக்கு 2 லாரிகளில் 30 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியதாக கர்நாடக அமைச்சர் மீதும், அங்குள்ள நீர்வளக்குழும அதிகாரிகள் மீதும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமமுகவில் இருப்பவர்கள் வேறு கட்சிக்கு செல்வது அவரவர் விருப்பம். ஆனால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வளர்த்த அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வரவேண்டும் என்று அழைப்பது எங்கள் கடமை. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நானும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறோம். நேற்று முன்தினம் கூட, ராமநாதபுரத்தில் அமமுக அமைப்பு செயலாளராக இருந்தவர், என்னை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம். அவரைத் தவிர யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்பதை ஏற்கனவே தெளிவாக ெசால்லிவிட்டோம்.
கஜா புயல் நிவாரண பணிகளை குறை சொல்வது எளிது. ஆனால் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது அங்குள்ள மக்களுக்கு தெரியும். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த துணை மின்நிலையம், மின்கம்பங்களில் பெரும்பாலானவற்றை சீரமைத்து விட்டோம். கிராமத்தில் இருந்து வெகுதூரத்திலும், வயல்வெளிகளிலும் மின்கம்பங்கள் சீரமைப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிப்புகளுக்கு ஏற்ப உரிய நேரத்தில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை இழந்த மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி