×

பிரிவினையை தூண்டுவதாக வக்கீல் புகார் சீமான் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னை தம்பு செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், வழக்கறிஞர். கடந்த சில தினங்களுக்கு முன் ராஜ்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் செய்தார். அதில் கூறி இருந்ததாவது: கடந்த 2016 மார்ச் 23ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் தரமணி பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் தமிழ்-தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார். இது தற்போது யூ டியூப்பில் பரவி வருகிறது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தரமணி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தரமணி போலீசார் விசாரணை நடத்தி சீமான் மீது இந்திய தண்டனை சட்டம் 153வது பிரிவின் கீழ் இரு பிரிவினரிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் பேசுதல் என்ற வகையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lawyer ,separation ,breach ,Seeman , lawyer complains, breach of divorce ,filed a case against Seeman
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது