×

புழல் சிறையில் அடைக்கப்பட்ட பெண் நக்சலைட்டுக்கு நெஞ்சுவலி

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் நக்சலைட்டுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மூவேந்தர் நகர் பி.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரியா (எ) பத்மா (47). இவர் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர். கடந்த 2002ம் ஆண்டு முதல், திருவண்ணாமலை மாவட்டம் கலவை போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி பூந்தமல்லி நீதிமன்றத்தில் சத்யபிரியா சரணடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சத்யபிரியாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை, சிறை துறையினர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prison,Female naxalite, chest pain
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...