தாம்பரம்: 34வது தேசிய ஜூனியர் நிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டி, இந்தியாவின் தடகள கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களில் இருந்தும் 16 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 200 மீட்டர் தடகள போட்டியில் சீயோன் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் பீ.கே.விஸ்வா தங்கப்பதக்கம் வென்றார். பள்ளி கல்வித்துறை சார்பில் நெய்வேலி, பாரதியார் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாநில அளவில் குடியரசு நாள் விளையாட்டு போட்டியான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டியிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். இந்த மாணவன், தெற்கு ஆசிய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளி குழுமங்களின் தலைவர் டாக்டர் என்.விஜயன், மாணவன் பீ.கே.விஸ்வாவை வெகுவாகப் பாராட்டினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி