×

கந்துவட்டி கும்பல் கைவரிசையா? நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தம்பதியினர் காரில் கடத்தல்

சென்னை: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவருடைய மனைவியை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்று மிரட்டுகின்றனர். எனவே, எனது பெற்றோரை மீட்டுத்தாருங்கள் என மகள் கூறினார். சென்னை அண்ணா நகர் 7வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகரான இவர், பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வேலை வாங்கித் தருவதாகவும், வட்டிக்கு பணம் வாங்கி தருவதாகவும் பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசன் நண்பர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக அவரது மனைவி ஜூலியிடம் கூறிவிட்டு ெசன்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜூலி, தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செல் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஜூலி செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் உங்கள் சொத்துக்களை எழுதி கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் பவர் ஸ்டார் சீனிவாசன் நண்பரை பார்க்க சென்றவர் வீடு திரும்பவில்லை. எனது செல்போனில் பேசிய நபர்கள் சொத்தை எழுதி கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் எனது கணவரை சொத்துக்காக யாரோ கடத்தி சென்று விட்டதாகவும், எனவே அவரை மீட்டு கொடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பவர் ஸ்டார் சீனிவாசன் செல்போன் என்னை ைவத்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போன் உதகையில் இருப்பதாக டவர் காட்டியது. உடனே போலீசார் சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு பவர் ஸ்டார் சீனிவாசன் நான் சொத்து பிரச்னை காரணமாக உதகைக்கு வந்துள்ளேன். விரைவில் ெசன்னைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கந்து வட்டி கும்பல் கடத்தி சென்று விட்டதாகவும் ஊட்டியில் உள்ள பங்களாவை தங்களது பெயருக்கு மாற்றித்தரும்படி மிரட்டி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் மகள் வைஷ்ணவி நிருபர்களிடம் கூறுகையில்: கடந்த 5ம் தேதி என்னுடைய அப்பாவை போலீஸ்காரர்கள் என்று கூறி சிலர் ஓட்டலுக்கு கூட்டிக் கொண்டு சென்றதாக டிரைவர் கூறினார். உடனே அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மறுபடியும் போன் செய்யும் போது ஒரு இடத்தை சொல்லி என் அம்மாவை வர சொன்னார்கள். அங்கு சென்ற பின் சிலர் சொத்து விபரங்களையெல்லாம் கேட்ட பிறகு சிறிது நேரத்தில் அனுப்புவதாக கூறினர். அதன் பிறகு ஊட்டிக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். அங்கு சென்ற பிறகு எனது அம்மாவும், அப்பாவும் பயத்துடன் என்னிடம் பேசினர். இந்நிலையில் பெங்களூரில் உள்ள ஒருவரிடம் என் அப்பா கடன் வாங்கியுள்ளார். அவர்கள் தான் கடத்தியிருக்கலாம் என்று கூறினார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gang ,gangsters ,Actor Power Star Srinivasan , Is the gang of gangsters, Actor Power Star Srinivasan
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை