×

மூத்த மடாதிபதி 111 வயது சிவகுமாரசாமிக்கு சென்னையில் சிறப்பு சிகிச்சை

பெங்களூரு,: இந்தியாவிலேயே மூத்த மடாதிபதியாக கருதப்படும் சித்தகங்கா மடாதிபதி  டாக்டர் சிவகுமாரசாமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு  சிறப்பு சிகிச்சை அளிக்க வசதியாக பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ்  மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.கர்நாடகாவில் உள்ள தும்கூரு சித்தகங்கா  மடத்தின் மடாதிபதி சிவகுமாரசாமிக்கு தற்போது 111 வயதாகிறது. அவருக்கு  முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலத்தில் ஏற்ற-தாழ்வு ஏற்படுகிறது.  நேற்று முன்தினம் காலை மீண்டும் மடாதிபதிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.  

சென்னையை சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் என்.எல்.குமார்  தலைமையில் 5க்கும் மேற்பட்ட டாக்டர் குழுவினர் துமகூரு வந்து மடாதிபதியை  பரிசோதனை செய்தபின் கூறுகையில், சுவாமிக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது.  மேலும் அவருக்கு இதயநோய் பாதிப்புக்கு வைத்துள்ள ஸ்டண்ட்டிலும் பிரச்னை  உள்ளது, பித்த பையிலும் கோளாறு உள்ளதால் சென்னையில் சிகிச்சை அளிப்பது  நல்லது என்ற யோசனையை தெரிவித்தனர்.அதை தொடர்ந்து நேற்று  காலை துமகூருவில் இருந்து கார் மூலம் பெங்களூரு எச்ஏஎல் விமான  நிலையத்திற்கு சுவாமியை அழைத்துவந்து, அங்கிருந்து ஏர் ஆம்புன்ஸ் மூலம்  காலை 10.40 மணிக்கு சென்னை கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள ரேலா  இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சுவாமி  சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தனியாக சிகிச்சை அறை ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் பழனிவேலு, எல்.என்.குமார் தலைமையிலான குழு  சிகிச்சை அளித்து வருகிறார்கள்.4 நாட்கள் சிகிச்சை முடிந்தவுடன் சிவகுமாரசாமி  மடத்திற்கு  திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bishop ,Chennai ,Sivakumarasamy , Siddhaganga mandapati, Dr. Sivakumarasamy, special treatment
× RELATED தேசிய அளவிலான ஆக்சுவேரியல்...