×

கடைசி போட்டியில் சதத்தை நோக்கி கம்பீர்

புதுடெல்லி: அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள கவுதம் கம்பீர் தனது கடைசி ரஞ்சி போட்டியில் சதத்தை நெருங்கி உள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில், ஆந்திரா, டெல்லி அணிகளுக்கு இடையேயான பி பிரிவு லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆந்திரா 390 ரன் குவித்தது. அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடிய டெல்லி அணியில் கவுதம் கம்பீர், தலால் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை தந்தது. முதல் விக்கெட்டுக்கு 108 ரன் சேர்க்கப்பட்ட நிலையில் தலால் (58) ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கம்பீர் அரைசதம் அடித்தார்.

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி 56 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. கம்பீர் 92, ஷோரே 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது கம்பீரின் கடைசி கிரிக்கெட் போட்டியாகும். அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் இன்று சதம் அடித்து, சிறப்பான ஆட்டத்துடன் விடை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 3ம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gambhir ,match , Gambhir towards,centurion , last match
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...