சென்னை: நாகர்கோவில்-தாம்பரம் இடையே சுவீதா சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நாகர்கோவில்- தாம்பரம் இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு ரயில், நாகர்கோவிலில் டிசம்பர் 30ம் தேதி மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி