×

தாம்பரத்தில் ஆணையர் ஆய்வு

தாம்பரம்:தாம்பரம் நகராட்சி பகுதிகளில் 7 நுண் உர செயலாக்க மையங்களும், 20 மிகச்சிறிய நுண் உர செயலாக்க மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் தினமும் 20 டன் முதல் 25 டன் வரை மக்கும் கழிவுகள் உரமாக ஆக்கப்படுகிறது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். உடன் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன், செங்கல்பட்டு மண்டல பொறியாளர் முருகேசன், தாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், சிவகுமார், ஜனார்த்தனம், காளிதாஸ் ஆகியோர் இருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,Tribunals , Commissioner ,Tribunals
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...