×

பாலியல் தொல்லை வழக்கு பெண்களை ஆபாச படம் எடுத்து பணம் பறித்த பைனான்ஸ் அதிபர்: போலீஸ் விசாரணையில் அம்பலம்

கும்பகோணம்: டெல்லியை  சேர்ந்தவர் சுமதி (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டெல்லியில் உள்ள   வங்கியில் பணியாற்றி வருகிறார். கும்பகோணத்தில் உள்ள வங்கியில் பயிற்சி  பெறுவதற்காக சுமதி  கடந்த 2ம் தேதி நள்ளிரவு கும்பகோணத்துக்கு வந்தார். பின்னர் பைபாஸ் சாலையில் நடந்து சென்றபோது உதவி செய்வதாக கூறி 4 வாலிபர்கள் இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் சுமதி புகார்  செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பைனான்ஸ் அதிபர் தினேஷ்  (24), வசந்த் (21), புருஷோத்தமன் (19), அன்பரசு (19) ஆகியோரை கைது செய்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பைனான்ஸ் அதிபரான தினேஷின் செல்போனை சோதனையிட்டபோது  இளம்பெண்களின் ஆபாச வீடிேயாக்கள், படங்கள் இருந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் தினேஷ், அப்பகுதியில்  பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், இளம்பெண்களை காதலிப்பதுபோல் அவர்கள் பின்னால் திரிந்து பல இடங்களுக்கு அழைத்து  சென்று பலாத்காரம் செய்து ஆபாசமாக வீடியோ  எடுத்து அவர்களது பெற்றோருக்கு  அனுப்பி மிரட்டி பணம்  பறித்து வந்ததும் தெரியவந்தது. இதேபோல் வங்கி பெண் ஊழியரை ஆபாசமாக படம்  பிடித்திருந்ததும்  விசாரணையில் தெரியவந்தது.  அவற்றை கைப்பற்றி  அழித்துவிட்டோம். மேலும் 4 பேரிடம் தீவிர விசாரணை  நடத்தி வருகிறோம். முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women , Sexual harassment, Accounting Principal, Police raid
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...