பெங்களூர்: 400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவே மேகதாது அணை கட்டுகிறோம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பெங்களூரில் பேட்டியளித்துள்ளார். மேகதாது அணையால் ஒரு ஏக்கர் நிலத்தை கூட பாசானவசதிக்கு பயன்படுத்த மாட்டோம் என அவர் கூறியுள்ளார். மேலும் எங்களது அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்த மாட்டோம் என்றும் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் சண்டையிட விரும்பவில்லை என அமைச்சர் சிவகுமார் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி