×

திருவண்ணாமலையில் 11 நாள் தரிசனத்துக்கு பிறகு மகா தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது: 23ம் தேதி பக்தர்களுக்கு தீப மை வழங்க ஏற்பாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலைமீது கடந்த 11 நாட்களாக பக்தர்களுக்கு காட்சியளித்த மகாதீபம் நிறைவடைந்தததால், தீப ெகாப்பரையை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று கொண்டுவந்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. அதையொட்டி, கடந்த 23ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது.அதைத்தொடர்ந்து, கடந்த 11 நாட்களாக மலை உச்சியில் மகாதீபம் பக்தர்களுக்கு காட்சியளித்தது. அதற்காக, சுமார் 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்பட்டன.

நேற்று அதிகாலையுடன் மகாதீபம் நிறைவடைந்தது. இதையடுத்து, சுமார் 200 கிலோ எடையுள்ள செம்பினால் உருவான மகாதீப கொப்பரையை, 2,668 அடி உயர மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு திருப்பணி ஊழியர்கள்  நேற்று காலை 11.30 மணியளவில்  கொண்டுவந்து சேர்த்தனர்.அங்கு மகாதீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. மலை உச்சியில் செல்ல முடியாத பக்தர்கள், கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட தீப கொப்பரையை வணங்கினர்.
இந்நிலையில், வரும் 23ம் தேதி நடைெபறும் ஆருத்ரா தரிசனத்தன்று, தீப கொப்பரையில் இருந்து பெறப்படும் மகாதீப மை, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு ‘தீபச்சுடர் பிரசாதம்’ (தீப மை) வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maha Deepa Koppara ,Thiruvannamalai , Tiruvannamalai, Maha Deepa, Koppara , provided, Deepa ink
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...