சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுகவிற்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று உள்நோக்கத்துடன் நடத்தப்படும் பிரசாரங்களை ஊடகங்களும் செய்தி பத்திரிகைகளும் தவிர்த்திட வேண்டும். நேற்று சைதாப்பேட்டையில் கவர்னர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டத்தின் போது சுரேஷ்பாபு என்பவர் டீக்கடையில் தாக்குதல் நடத்தி அதை படமெடுக்கப்போன தொலைக்காட்சி நிருபரை தாக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.
ேமலும், ஊடகத்தில் சுரேஷ் பாபு என்பவர் திமுகவை சேர்ந்தவர் என்று செய்யப்படும் பிரசாரத்தில் துளியும் உண்மை இல்லை. அவர் கழகத்தின் உறுப்பினரும் இல்லை. திமுகவில் அடிப்படை உறுப்பினராககூட இல்லாத ஒருவரின் வன்முறைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு, அவர் திமுகவை சேர்ந்தவர் என்று பொய்யாக ஊடகங்களில் செய்தி பரப்புவது மிகவும் வேதனைக்குரியது. தாக்குதலில் ஈடுபட்ட சுரேஷ் பாபு மீது தயவு தாட்சண்யமின்றி காவல்துறை நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன்பு அவரை நிறுத்தி தக்கதண்டனை வாங்கித் தர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி