×

புழல் ஏரிக்கரை பகுதியில் எல்லைமீறும் காதல்ஜோடி

புழல்: சென்னை புழல் ஏரி மதகில் இருந்து சாமியார் மடம், தண்டல் கழனி, காவாங்கரை கண்ணப்பசாமி நகர், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் புழல் வரை சுமார் 2 கி.மீ. தூரம் வரை ஏரிக்கரை செல்கிறது. இந்த கரைகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் எரிந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து காதல் ஜோடிகள் பைக்குகளில் வந்து ஏரிக்கரையில் பொழுது கழித்தனர். மேலும் பலர் மது வாங்கி வைத்து கரையில் உள்ள சுவர்கள் மீது அமர்ந்து குடித்துவந்தனர். ஒரு சில ஜோடிகள், அத்து மீறல்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏரிக்கரையில் நடைபயிற்சி செல்பவர்கள் இந்த காட்சியை பார்த்து வேதனை பட்டனர். ஏரியை சுற்றிப்பார்க்க வருகின்றவர்களும் காதலர்களின் செய்கையை பார்த்து முகம் சுளித்தனர். இதுதவிர குடிகாரர்கள் தொல்லையும் அதிகரித்தது.

இந்த நிலையில், திருட்டு கும்பல் ஒன்று, ஏரிக்கரையில் சுற்றிவந்து காதல்ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்து வருகிறது. குடிபோதையில் மயங்கிக்கிடந்த நபர்களின் பாக்கெட்டுகளில் இருந்து செல்போன், பணத்தை எடுத்து சென்றுவிடுகின்றனர். இதில் பாதிக்கப்படுவர்கள் பெரும்பாலும் கள்ளக்காதல் ஜோடி என்பதால் இதுபற்றி போலீசில் புகார் கொடுப்பது இல்லை என்று தெரிகிறது. இதுவும் திருடர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டதால் தொடர்ந்து வழிப்பறி செய்கின்றனர். எனவே, போலீசாரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ரோந்து வந்து கண்காணிக்க வேண்டும். எல்லை மீறும் காதல் ஜோடிகளை கண்டிக்க வேண்டும். திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Roma ,pond lake area , Love lover, romance
× RELATED 91-வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த வெளிநாட்டு படம் 'ரோமா'