தஞ்சை: தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசின் நீர்வள ஆணையம், கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியிருப்பது சட்ட விரோத செயலாகும். அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்காவிட்டால் மேகதாது பகுதிக்கு சென்று அணி அணியாக கொரில்லாக்களாக மாறி அறப்போர் முறையில் மறியல் போராட்டம் செய்வோம். அறப்போட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி