×

கடன் தொல்லையால் விபரீத முடிவு தக்கலையில் டாக்சி டிரைவர் தற்கொலை அதிர்ச்சியில் அண்ணன் மயங்கி விழுந்து சாவு

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடன்தொல்லையால் டாக்சி டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் இறந்த அதிர்ச்சியில் அவரது அண்ணனும் மயங்கி விழுந்து இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் கண்டன் (41). டாக்சி டிரைவர். அவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஸ்ரீகண்டன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு புதியதாக ஒரு கார் வாங்கினார். ஆகவே ஏற்கனவே கடனில் இருந்தவருக்கு மேலும் கடன் சுமை அதிகரித்து உள்ளது. இதனால் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து வந்தார். பின்னர் தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவு அவரது மனைவி வந்து பார்த்துள்ளார். அப்போது அறையில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டன் இறந்து கிடந்தார். இது குறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து கண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கண்டன் இறந்த தகவல் அறிந்து அவரது அண்ணன் மணிகண்டன் அவரை பார்ப்பதற்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தம்பியின் நிலைமையை பார்த்து கதறி அழுதவர் திடீரென மருத்துவமனை வளாகத்தில் மயங்கி கீழே விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி மரணமடைந்த அதிர்ச்சியில் அண்ணன் மயங்கி விழுந்து இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மணிகண்டனுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது….

The post கடன் தொல்லையால் விபரீத முடிவு தக்கலையில் டாக்சி டிரைவர் தற்கொலை அதிர்ச்சியில் அண்ணன் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Takkalai ,Thakkalai ,Kanyakumari district ,
× RELATED தக்கலை அருகே பைக் விபத்தில் மெக்கானிக் பலி