×

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கு விவரம் அறிய எல்இடி டிவி: நீதித்துறை அதிகாரிகள் தகவல்

ேவலூர்: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கு விவரங்களை அறிய எல்இடி டிவி வைக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிமன்றங்களில்  தங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நாளில் சம்பந்தப்பட்டவர்கள் மணிக்கணக்கில் நீதிமன்ற வளாகத்தில் காத்திருக்க வேண்டும். இது ஒருபுறம் என்றால் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்கு அழைக்கும்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்தும் அழைக்கப்பட்டது தெரியாமல் வழக்கில் ஆஜராகாமல் வழக்கு தொடர்புடையவர்கள் சென்று விடுவதும் உண்டு.  இதனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அன்றைய தினம் வரவில்லை என்று நினைத்து, அடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அன்றைய தினம் எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

விசாரணை நடந்து வரும் வழக்கின் விவரம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பல லட்சம் செலவில் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வழக்கறிஞர்கள், நீதித்துறையை சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : LAD , Tamilnadu Court, LED TV, Judicial authority
× RELATED பேரையூர் மலையடிவாரப்பகுதியில்...