×

திருத்தணி அருகே பாமக மாவட்ட துணை தலைவர் மீது மர்மநபர்கள் கொலை வெறிதாக்குதல்

* பைக்கில் வந்து சுற்றிவளைத்த கும்பலுக்கு வலை

சென்னை: திருத்தணி அருகே பைக்கில் வந்து திருவள்ளூர் ேமற்கு மாவட்ட பாமக துணைத்தலைவர் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி அடுத்த காசிநாதன் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி மகன் சுரேஷ் (38). திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக துணை தலைவராக உள்ளார். மேலும், கட்டுமான பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை திருத்தணிக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சுரேஷ் திரும்பிக்கொண்டிருந்தார்.  காந்தி ரோட்டில் வந்த அவரது வாகனத்தை திடீரென 2 பைக்குகளில் வந்த மூன்று மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். இதில் நிலை தடுமாறி விழுந்த  சுரேசை அந்த கும்பல் ஆயுதங்களால் சரமாரியாக ெவட்டி, கொடூர தாக்குதல் நடத்தியது. அவரது கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் தாங்கள் வந்த பைக்குகளில் தப்பிச்சென்றது. படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில், சுரேசை வெட்டியது  திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்த குமரேசன் மற்றும் அவரது நண்பர் சற்குணன் மற்றொருவர் என 3 பேர் என அடையாளம் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து 3 ேபரையும் தேடி வருகின்றனர். அத்துடன்  தொழில் போட்டியால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மிகுந்த ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Deputy District ,Pamaga ,Thiruthani , Tiruttani, murder,
× RELATED மும்பையில் வசிக்கும் தமிழருக்கு...