×

நான் மது குடிக்கவில்லை உட்கட்சி பூசலால் என்னை சிக்க வைத்து விட்டனர்: பாஜவினர் மீது காயத்ரி பாய்ச்சல்

சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் நன்றாக இருக்கிறேன். என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து எனக்கு வருத்தம் இல்லை. யாரோ என்னைப் பழிவாங்குகிறார்கள். அது யாரென்று எனக்கு தெரியவில்லை. என்னை பற்றி என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை. நான் தவறாக நடந்திருந்தால் அதை நானே ஒப்புக்கொள்வேன். அன்றைய தினம் என்ன நடந்தது என்று எனக்கும், எனது அம்மாவுக்கும், என் உடன் இருந்தவர்களுக்கும் தெரியும். காவலர்கள் யாரும் என்னை வீட்டில் விடவில்லை. நான் குடிபோதையிலும் வரவில்லை. அனைவரும் என்னைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

ஏன் என்னைக் குறிவைக்கிறார்கள் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. அன்று இரவு நான் ஷூட்டிங் முடித்துவிட்டு என் சக நடிகைகளுடன் வந்து கொண்டிருந்தேன். நள்ளிரவு நான்தான் அவர்களை வீட்டில் விட்டேன். பாஜவில் இருக்கும் சிலருக்கே என்னை பிடிக்காது. நான் வளர்ந்து வருவதால் அவர்களில் சிலருக்கு என்னை பிடிக்கவில்லை. இது சரியான வழி இல்லை. நீங்கள் அனைவரும் வளர்ந்தால் நான் சந்தோஷப்படுவேன். ஆனால், மற்றவர்கள் முதுகில் குத்த வேண்டாம். நான் ரத்தப் பரிசோதனை செய்யவும் தயாராக உள்ளேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : leap ,BJP ,Gayatri , alcohol, struggle, Gayatri, BJP
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு