கும்பகோணம்: கும்பகோணம் அருகே ரூ.20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட குடுகுடுப்பைக்காரர் மீட்கப்பட்டுள்ளார். தேப்பெருமாள் நல்லூரைச் சேர்ந்த குடுகுடுப்பைக்காரர் மனோகர் என்பவர் நேற்று கடத்தப்பட்டார். ரூ.20 லட்சம் தருமாறு மனோகரின் மனைவிக்கு செல்போனில் மிரட்டல் விடுக்கப்பட்டது. புகாரை அடுத்து மணல்மேடு அருகே குடுகுடுப்பைக்காரரை போலீசார் பத்திரமாக மீட்டனர். ரூ.20 லட்சம் தருமாறு மனோகரின் மனைவியை செல்போனில் மிரட்டிய கந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி