×

சித்தூர் அருகே கள்ளக்காதலன் வெறிச்செயல் வேறொருவருடன் பழகியதால் கள்ளக்காதலி அடித்துக்கொலை

திருமலை: சித்தூர் அருகே வேறொருவருடன் பழகிய கள்ளக்காதலியை அடித்து கொன்று கோணிப்பையில் கட்டி சடலத்தை கிணற்றில் வீசிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், மல்லய்யபல்லி கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சுமுனி, விவசாயி. இவரது மனைவி கிரிஜா(28). இவர்களுக்கு முனிநவீன்(12) என்ற மகனும், கீதா(10) என்ற மகளும் உள்ளனர். கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்த கிரிஜா திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த செஞ்சுமுனி பல இடங்களில் தேடியும் கிரிஜா கிடைக்கவில்லை. இதனால் அவர் கடந்த 23ம் தேதி சந்திரகிரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரிஜாவின் செல்போனில் உள்ள விவரங்களின்படி விசாரித்தனர். அதில் கிரிஜாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிரி(36) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதும், கிரிஜா மாயமான அன்று இருவரின் செல்போன்களும் செஞ்சுமுனி வீட்டில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி கிரி, கள்ளக்காதலியான கிரிஜாவை கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசிவிட்டதாக கூறி தோரணகும்மல கிராம வருவாய் அலுவலர் முனுசாமியிடம் சரண் அடைந்தார். பின்னர், அவர் சந்திரகிரி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

கிரியிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கிரிஜாவுக்கும், கிரிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் கிரிஜாவுக்கும், வேறு ஒரு நபருக்கும் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டு அவருடனும் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்து ஆத்திரமடைந்த கிரி, கிரிஜாவிடம் தகராறு செய்துள்ளார். கடந்த 13ம் தேதி கிரிஜா, வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற கிரி, வேறு நபருடன் இருக்கும் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் கிரிஜா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிரி, கிரிஜாவை விறகு கட்டையால் சரமாரி தாக்கி உள்ளார்.  

இதில் தலையில் பலத்த காயமடைந்த கிரிஜா மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கிரி, கிரிஜாவின் சடலத்தை கோணிப்பையில் கட்டி அங்குள்ள விவசாய கிணற்றில் வீசியுள்ளார். போலீசார் தேடுவதை அறிந்து கிராம வருவாய் அலுவலரிடம் சரண் அடைந்தார். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து போலீசார், விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த கிரிஜாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஈஸ்வரய்யா வழக்குப்பதிவு கிரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவன், கள்ளக்காதலன் ஆகியோர் இருந்து கொண்டு 3வது ஆக வேறு நபருடன் பழகியதால் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kallakadalan ,Chittor , Chitur, Kallakadalan, Kallakadali, beaten killer
× RELATED திராவகம் வீசப்பட்ட பெண்ணுக்கு...