×

இடைத்தேர்தலுக்கு தேர்தல் பார்வையாளர் நியமனம்: தமிழிசை அறிவிப்பு

சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழிசை கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள 20 தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆம்பூருக்கு நரேந்திரன், சோளிங்கர்-முன்னாள் எம்எல்ஏ விகேஆர்.சீனிவாசன், குடியாத்தம்-கார்த்தியாயினி, பாப்பிரெட்டிபட்டி-முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், அரூருக்கு பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Observers ,Election Candidate ,Tamilnadu Announcement , Election Observers,Election Candidate, Tamilnadu Announcement
× RELATED உள்ளாட்சித் தேர்தல் மநீம வேட்பாளர் தேர்வு குழு அறிவிப்பு