×

பண்ருட்டி அருகே முந்திரி தோப்பில் சிறுத்தை நடமாட்டம்? மக்கள் பீதி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே முந்திரி காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் உள்ள முந்திரி தோப்புகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஒருசில மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனை அகற்றுவதற்காக அப்பகுதி மக்கள் சென்றபோது நிலத்தின் பகுதியில் சிறுத்தையின் கால் தடம் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர். இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தபோது மற்றவர்களும் வந்து பார்த்தனர்.

எங்களது முந்திரி தோப்பிலும் இதேபோல் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக ஒருவருக்கொருவர் தகவலை பரிமாறிக்கொண்டனர். ஒருசிலர் தூரத்தில் சிறுத்தை செல்வதை அறிந்து வெடி வைத்ததாகவும் கூறுகின்றனர். இத்தகவல் காட்டுத் தீபோல் பரவியதால் மருங்கூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் முந்திரி தோப்பிற்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூரில் இதேபோல் சிறுத்தையின் கால் தடங்கள் இருந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் முத்தாண்டிக்குப்பம் காவல்துறைக்கு தெரிவித்ததின்பேரில் போலீசார் வந்து பார்த்தபோது சிறுத்தை காணவில்லை. எனவே இரவு நேரத்தில் சிறுத்தைகள் வந்து தாக்கி விடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cashew grove ,Panruti , Panruti, cashews, leopard
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு