×

கொல்கத்தாவில் குடிபோதையில் ஒருவர் மீது காரை மோதிய பெண் ஃபேஷன் டிசைனர் கைது

கொல்கத்தா: கொல்கத்தாவில் குடிபோதையில் ஒருவர் மீது காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற பெண் ஃபேஷன் டிசைனரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை தனதுகாரில் அதிவேகத்தில் சென்ற ஃபேஷன் டிசைனரான அதிதி அகர்வால் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனினும் காரை நிறுத்ததாத அதிதி அருகில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் சென்று விட்டார். மேலும் சி.சி.டி.வி. காட்சிகளின் மூலம் அதிதியை கண்டுபிடித்த போலீசார், அவரை கைதுசெய்தனர்.

மருத்துவ பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்தது. மதுபான விடுதி ஒன்றில் நண்பர்களுடன் மது அருந்திய அதிதி அவர்களை வீடுகளில் விட்டுவிட்டு தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது விபத்து நேர்ந்தது தெரியவந்தது. மேலும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை ஐந்து நட்சத்திர ஓட்டலில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : woman fashion designer ,car crash ,Kolkata , woman fashion,designer,arrested,car crash
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்