×

கஜா புயல் நிவாரணத்திற்கு ரூ.2,006 வழங்கிய 6ம் வகுப்பு மாணவி

விருதுநகர்: கஜா புயல் நிவாரணத்திற்காக, விருதுநகரில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது சேமிப்பான ரூ.2 ஆயிரத்து 6ஐ தாசில்தாரிடம் வழங்கினார்.  விருதுநகர் மேலரத வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஹரிணி ஸ்ரீ, அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தினசரி பாக்கெட் மணியாக பெற்றோர் வழங்கும் 10 ரூபாயில், செலவு போக பாக்கியை வீட்டு உண்டியலில் சேமித்து வைத்து வந்தார்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனது சேமிப்பு பணத்தை வழங்க விரும்பினார். இதனையடுத்து, பெற்றோருடன் விருதுநகர் தாசில்தார் சீனிவாசனை சந்தித்த மாணவி, அவரிடம் தனது சேமிப்பான ரூ.2006ஐ வழங்கினார். நெகிழ்ச்சியடைந்த தாசில்தார், ‘நன்றாகப் படித்து அரசு அதிகாரியாகி, சேவை செய்ய வேண்டும்’ என மாணவியை வாழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,storm ,Ghazh , Gaja storm, relief, student
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...