காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் தெற்கே கந்தஹாரில் இருந்து மரூப் மாவட்டத்திற்கு அந்நாட்டின் விமான படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றது. இதில் ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் இருந்து மருஃப் மாவட்டத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிவந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி நொறுங்கியது. அவர்களை கந்தஹாரில் இருந்து மரூப்பிற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு இருந்த ஹெலிகாப்டர் திடீரென அவசரமுடன் தரை இறக்கப்பட்டது.
இதனை அடுத்து ஹெலிகாப்டர் தீப்பிடித்து கொண்டது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாரும் பலியாகவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவித்தது. ஆனால் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ஜாவித் கஃபூர் கூறும்பொழுது, 2 ராணுவ வீரர்கள் இதில் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர் என கூறியுள்ளார். இதற்கிடையில் அந்த ஹெலிகாப்டரை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று அப்பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி