சென்னை : மலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கிறார் மோகன்லால். இந்நிலையில் சமீபத்தில் மீ டூ இயக்கம் பற்றி அவர் கருத்து கூறினார். அதில், ‘மீ டூ என்பது பேஷனாகிவிட்டது. தொடக்கத்தில் எல்லாம் பரபரப்பாகவே இருக்கும். போகப்போக அது எல்லாம் காணாமல் போய்விடும்’ என்றார். இதுகுறித்து நடிகை ரேவதி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மீ டூ இயக்கம் நீண்ட காலம் இருக்காது என்று பிரபல நடிகர் தெரிவித்துள்ளார். இது போன்றவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? அஞ்சலி மேனன் (மலையாள திரைப்பட இயக்குனர்) கூறியது போல் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தொல்லைக்கு உள்ளாவது, அதை வெளியே தெரிவிப்பது, அதன் மூலம் எப்படி மாற்றம் வரும் என்பது தெரியாது. இவ்வாறு ரேவதி கூறியுள்ளார். மோகன்லாலின் பெயரை குறிப்பிடாமல் அவரை செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் என மறைமுகமாக தாக்கியுள்ளார் ரேவதி.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி