×

பேரையூர் அருகே மாணவிகளை ராகிங் செய்யும் வாலிபர்களை கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம்

பேரையூர்: பேரையூர் அருகே பள்ளி மாணவிகளை ராகிங் செய்யும், வாலிபர்களை கைது செய்யக் கோரி மாணவர்கள் இன்று  போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே எ.பாறைப்பட்டி, ஜாரிஉசிலம்பட்டி, சின்னசிட்டுலொட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எம்.சுப்புலாபுரத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தத்திலிருந்து பள்ளிக்கு செல்ல அரை கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் நடந்த செல்ல வேண்டும். அப்போது அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் சில தினங்களாக மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியும், பாலியல் ரீதியான தொந்தரவுகளை செய்து, மிரட்டி வந்துள்ளனர்.  

இது பற்றி மாணவிகளின் பெற்றோர், பள்ளி தலைமை, உதவி தலைமை ஆசிரியர் மற்றும்  டி.கல்லுப்பட்டி போலீசில் புகார்தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. நேற்று எ.பாறைப்பட்டி செல்லக்கூடிய அரசு பஸ்சை வழிமறித்த வாலிபர்கள், மாணவிகளை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இதனால் அச்சம் அடைந்த மாணவ, மாணவிகள்  இன்று காலை எ.பாறைப்பட்டி பஸ் நிறுத்தத்தில், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போரட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து டி.கல்லுப்பட்டி போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து  போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர். இதுகுறித்து பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘‘இது பள்ளிக்கு வெளியே நடக்கும் பிரச்னை. எனவே பள்ளிக்கு வரவில்லையென்றால் ஆப்சென்ட்டுதான் போடுவேன்’’என்றார்.
மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், ‘‘பள்ளிக்கு செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்வதை எங்களுக்கு தெரியாது என்று ஆசிரியர்களும், நடவடிக்கை எடுக்காத காவல்துறையையும் நினைத்து வருத்தமளிக்கிறது. இது பிரச்னை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men ,Peraiyur , Peraiyur, rocking, youth, struggle
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட் கார்சியா சுட்டுக்கொலை!