×

மெல்போர்னில் பலத்த மழை : இந்தியா - ஆஸி., இடையேயான 2-வது டி20 கைவிடப்பட்டது

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டி20 போட்டி பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பந்து வீச தீர்மானதித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி  19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மழை தொடர்ந்ததால் ஆஸ்திரேலிய அணியால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து மழை சிறிது நேரம் பெய்யாமல் இருந்ததால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 19 ஓவரில் 137 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. சிறிது நேரம் ஓய்ந்ிதருந்த மழை மீண்டும் பெய்ய துவங்கியது. இதனையடுத்து இந்தியா களமிறங்க முடியாத சூழல் உருவானது. பின்னர் தங்களுக்குள் விவாதித்த நடுவர்கள் இரண்டாவது டி20 போட்டி பாதியில் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. தற்போது இரண்டாவது போட்டி கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா கட்டாயம் வென்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Melbourne ,Aussie ,India , 2nd T20 match, India, Australia, dropped
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...