சென்னை: தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டில் 18 செ.மீ மழையும், மதுராந்தகத்தில் 14 செ.மீ மழையும் பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த 3 நாட்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி