×

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க ஆணை

மதுரை : கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் கோரிய வழக்கில் திங்கட்கிழமை தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வாழைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kazha storm , Gaja Storm, TN Government, compensation, request, petitioner
× RELATED திருவாரூரில் கஜா புயலின்போது...