×

இலங்கையில் பரபரப்பு : ரணில் தரப்பு உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே ஆதரவாளர்கள் வெளிநடப்பு

கொழும்பு : பரபரப்பான சூழ்நிலையில்  நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினரும், மஹிந்த ராஜபக்சே தரப்பினரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இலங்கை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு பெயர்களை சபாநாயகர் பரிந்துரைத்தார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரணில்ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர். ராஜபக்சே ஆதரவாளர் தினேஷ் குணவர்தன பேச்சுக்கு ரணில் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் தான் அரசாங்கம் என ரணில் ஆதரவாளர்கள் அவையில் முழக்கம் இட்டனர்.  ரணில் தரப்பு உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே ஆதரவாளர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajapaksa ,supporters ,Ranil , Rajapaksa's supporters walk out to protest against Ranil's membership speech
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...