×

கஜா புயலால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: ஓபிஎஸ் பேட்டி

புதுக்கோட்டை: கஜா புயலால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் யாரும் இதுவரை தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று களமாவூர், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையை ஆராய்ந்து வேளாண் கடன் தள்ளுபடி குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும்.

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்ததை தொடர்ந்து மத்திய குழு சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு வர உள்ளது. மத்திய அரசு நாம் கோரியை நிதியை கொடுக்கவில்லை என்றாலும், வேண்டிய நிதியை தமிழக அரசு தன் சொந்த நிதியிலிருந்து கொடுத்து மக்களை காப்பாற்றும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் முதல்வர் வந்து மக்களை சந்திப்பார்.  பாதிக்கப்பட்ட பகுதிகளை இயற்கை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்துவோம். இதுவரை கஜா புயலால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicide ,interview ,OBS ,kazha storm , Gajah Storm, farmers, suicide and OPS
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை