×

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற சுஷ்மா சுவராஜ் முடிவுக்கு அவர் கணவர் வரவேற்பு

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுஷ்மா சுவராஜ் முடிவெடுத்துள்ளதற்கு அவர் கணவர் சுவராஜ் கவுசல் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலம் கருதி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த முடிவுக்கு அவர் கணவர் சுவராஜ் கவுசல் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஓட்டப்பந்தய வீராங்கனை மில்க்கா சிங் கூட ஒரு கட்டத்தில் ஓட்டத்தை நிறுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1977 இல் இருந்து 41 ஆண்டுகளாக 11 தேர்தல்களில் சுஷ்மா போட்டியிட்டதையும், 47 ஆண்டுகளாக அவருக்குப் பக்கப்பலமாகத் தான் இருந்து வருவதையும் சுவராஜ் கவுசல் குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sushma Swaraj ,election , Sushma Swaraj,concludes,husband,going ,parliamentary election
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...