சென்னை: சாதி ஆணவப் படுகொலைகளை நடத்தும் கொடூர குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கை:கிருஷ்ணகிரி சூடகொண்டப்பள்ளி ஊரைச் சார்ந்த, மனம் ஒருமித்து காதல் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ்-சுவாதி இருவரையும் கொடூரமாக கொலை செய்து கர்நாடகாவில் உள்ள ஆற்றில் வீசி எறிந்துள்ள கொடுமை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, இக்கொடூரக் கொலை புரிந்தவர்கள் தப்பி விடாமல், நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடி இன சிறுமி மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கும் கொடூர கொலைக்கும் ஆளாக்கப்படும் கொடுமைகளை காவல்துறை புகாரைப் பதிவு செய்யக் கூட மறுப்பது அரசு நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஆதிக்க மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது.சாதி ஆணவப் படுகொலைகள் நடத்தும் கொடூரக் குற்றவாளிகள் மற்றும் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோர் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி