சேலம்: 8 வழிச்சாலை நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். அரசு நிகழ்ச்சிகள் இருப்பதால் புயல் பாதித்த இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் வரும் செவ்வாய்க்கிழமை மாலை புயல் பாதித்த இடங்களை பார்வையிட உள்ளதாக அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி